மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அவர்கள் விவேகானந்தா கேந்திரா வித்யாலயா திட்டங்களை பார்வையிட ஜலாங் கிராமத்திற்கு சென்ற பொழுது, உள்ளூர் மக்கள் அமைச்சர் உட்பட பல விருந்தினர்களுக்கு தங்கள் கிராம வழக்கத்தின் படி நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனங்கள் வரவேற்றனர். அதனை தொடர்ந்து மத்திய அமைச்சரும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவர்களுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார் இதற்கு பாரதப் பிரதமர் மோடி அருணாச்சல பிரதேசத்தின் பாரம்பரியத்தையும் அமைச்சரின் நடனத்தையும் பாராட்டியுள்ளார்.