தமிழ்நாடு அரசு சார்பாக தொடர் இரத்ததான முகாம் நடத்தும் சேவை அமைப்புகளுக்கு, விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு, சென்னை ரிப்பன் மாளிகையில், இன்று (28/10/2023) மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பெருநகர் சென்னை மாநகராட்சியின் மேயர் திருமதி. பிரியா அவர்கள், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS) தொடர் இரத்த தான முகாம் ஏற்பாட்டினை பாராட்டி விருதும், சான்றிதழும் வழங்கி கௌரவித்தார்கள்.