தொப்பி வாப்பா பிரியாணி கடையில் நடந்த பகீர் சம்பவம் : தருமபுரியில் பரபரப்பு !

தொப்பி வாப்பா பிரியாணி கடையில் நடந்த பகீர் சம்பவம் : தருமபுரியில் பரபரப்பு !

Share it if you like it

தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் கடந்த 6 -ம் தேதி புதிதாக திறக்கப்பட்ட தொப்பி வாப்பா பிரியாணி ஓட்டல் செயல்பட்டு வருகிறது. அந்த ஓட்டலில் மாஸ்டராக ஜெட்டி அள்ளியை சேர்ந்த முகமது ஆசிக் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் வழக்கம்போல் இரவு ஓட்டலில் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுமார் இரவு 10 மணிக்கு ஓட்டலுக்கு 4 பேர் வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த முகமது ஆசிப் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இதுக்குறித்து தகவல் அறிந்த தருமபுரி மாவட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? எதற்காக இந்த இளைஞரை கொலை செய்தனர் இதன் பின்னணியில் யார் யார் இருக்கின்றனர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தர்மபுரி – சேலம் முக்கிய சாலையில் அமைந்துள்ள பிரபல பிரியாணி ஓட்டலில் வாடிக்கையாளர்கள் உணவருந்திக் கொண்டு இருந்தபோதே மாஸ்டர் இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தர்மபுரி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *