பின்னால் பைபிள் வசனம் : முன்னால் திமுக கொடி : போதையில் அட்டூழியம் !

பின்னால் பைபிள் வசனம் : முன்னால் திமுக கொடி : போதையில் அட்டூழியம் !

Share it if you like it

செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த சைமன் பிரபு சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் தனது காரில் சென்றுள்ளார். அப்போது தனது மாருதி சுஸுகி காரை நடுரோட்டில் நிறுத்தி காரில் ஏசியை புல்லாக வைத்து பின் தமிழ் பாடலை சத்தமாக வைத்து ஆனந்தமாக கழுத்து வரை மதுவை குடித்து மல்லாக்க படுத்து தூங்கிவிட்டார்.

காரின் முன் பகுதியில் திமுக கொடியும் பின் பகுதியில் “என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும்” கிறிஸ்துவ பைபிளின் வசனமும் எழுதியிருக்க அதனுள் தங்க செயின் தங்க காப்பு தங்க மோதிரம் என நடமாடும் நகைக்கடை போல் காரின் உள்ளே மல்லாக்க படுத்திருக்கும் சைமன் பிரபுவை காவல்துறை அதிகாரிகள் தட்டி எழுப்ப எழுந்து உட்கார கூட முடியாமல் மீண்டும் பழைய நிலைக்கே சென்று தூங்கியுள்ளார்.

இதனால் அந்த காவலர் அருகிலிருந்த பொதுமக்களின் உதவியோடு அந்த காரை நடுரோட்டிலிருந்து ஓரமாக தள்ளி வைத்தனர். பின்னர் அதிகாரிகள் திமுக ஆதரவாளரான போதை ஆசாமியை தட்டி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த சைமன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆபாசமாகமாகவும் தரக்குறைவாகவும் பேசிய சைமனை காவல் துறை அதிகாரிகள் நன்கு கவனித்து அனுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *