பட்டியல் சமூக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி…10,466 கோடி நிதி?

பட்டியல் சமூக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி…10,466 கோடி நிதி?

Share it if you like it

பட்டியல் சமூக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பா.ஜ.க. மூத்த தலைவர் தடா பெரியசாமியை விடியல் அரசு கைது செய்துள்ளது. இதனை, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை இதோ.

மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள், பட்டியல் சமூக மக்களுக்கான நலத் திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியை முறையாகச் செலவிடாமல், வேறு திட்டங்களுக்கு மடைமாற்றி வருகிறது திறனற்ற தி.மு.க. அரசு. இதனை கண்டித்து கோயம்பேடு அம்பேத்கர் சிலையருகே போராட்டம் நடத்திய பா.ஜ.க. பட்டியல் அணி மாநிலத் தலைவர் தடா பெரியசாமி மற்றும் பா.ஜ.க. தொண்டர்களை கைது செய்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஒதுக்கப்பட்டுள்ள நிதியை முறையாக பட்டியல் சமூக நலத்திட்டங்களை நிறைவேற்ற மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், தொடர்ந்து பட்டியல் சமூக மக்களை வஞ்சித்து வருவதை திறனற்ற தி.மு.க. அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Image

Share it if you like it