வீடியோ இருந்தால் சன் டி.வி.யில் போட்டுக்கோ… தி.மு.க.வினருக்கு அண்ணாமலை அதிரடி சவால்!

வீடியோ இருந்தால் சன் டி.வி.யில் போட்டுக்கோ… தி.மு.க.வினருக்கு அண்ணாமலை அதிரடி சவால்!

Share it if you like it

எனது வீடியோ இருந்தால் சன் டி.வி.யில் போடுங்கள். ப்ரிவியூ ஷோவுக்கு நானே வந்து பார்க்கிறேன் என்று தி.மு.க.வினருக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சாவல் விட்டுத்திருப்பது தமிழக அரசியலில் ஒரு நேர்மையான, தூய்மையான அரசியல்வாதி இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, அரசியல்வாதிகள் என்றாலே கலெக்ஷன், கரெப்ஷன், கமிஷன்தான். தவிர, பெண்கள் விஷயத்திலும் ஜொள்ளு பார்ட்டிகள்தான். இவை எல்லாவற்றுக்கும் மேலாக கிரிமினல் குற்றம் இல்லாத அரசியல்வாதிகளை பார்க்கவே முடியாது. அனைவரும் ஏதாவது ஒரு கிரிமினல் விவகாரத்தில் சிக்கி இருப்பார்கள். அதேபோல, ஏதேனும் ஒரு வழக்கில் சிறை சென்றுவிட்டு வந்தவர்களாக இருப்பார்கள். இதை நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் பார்க்க முடியவும். அதேபோல, ஆட்சியில் இருக்கும்போது வகைதொகை இல்லாமல் சொத்து சம்பாரித்து விட்டு, ஆட்சி போனதும் சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி கோர்ட், கேஸ் என அலையும் பலரையும் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில்தான், தமிழக பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டார் ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்று ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை. இவர் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு, தமிழக பா.ஜ.க. எழுச்சி பெற்றிருக்கிறது என்றால் மிகையாகாது. அதேபோல, தமிழக இளைஞர்கள் பலரும் ஆர்வமுடன் பா.ஜ.க.வில் சேர்ந்து வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் கணிசமான இடங்களில் பா.ஜ.க. வெற்றிபெற்றதோடு, வாக்கு வங்கியும் அதிகரித்திருந்தது. அதேபோல, எந்த சமரசமும் இல்லாமல் எதிர்க்கட்சிகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு வருகிறார் அண்ணாமலை.

குறிப்பாக, தி.மு.க. அரசுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் பி.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட மின்வாரிய டெண்டர் ஊழலை அம்பலப்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர், அண்ணாமலை மீது இல்லாததும் பொல்லாதையும் சொல்லி பழிபோட்டார்கள். இதன் ஒரு பகுதியாக பெங்களூருவில் நடந்த ஒரு சம்பவம் குறித்த அண்ணாமலை வீடியோ இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பொய் செய்தியை பரப்பி வந்தார்கள். ஆனாலும் அண்ணாமலை அசரவில்லை. மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் தேவையில்லை என்பதுபோல துணிச்சலுடன் இருந்து வருகிறார்.

இந்த நிலையில்தான், மேற்படி வீடியோ குறித்த ஒரு செய்தியாளர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, ‘அப்படியொரு வீடியோ இருந்தால் அதை சன் டி.வி.யில் ஒளிபரப்பட்டும். அல்லது ஏதேனும் தியேட்டரில்கூட ரிலீஸ் செய்யட்டும். நான் வந்து ப்ரிவியூ ஷோ பார்க்கிறேன்.’ என்று தில்லாக பேட்டியளித்திருக்கிறார். மேலும், சுயஒழுக்கத்திலும், நேர்மையிலும் இந்த அண்ணாமலையை யாரும் உரசிக்கூட பார்க்க முடியாது என்று அதிரடித்திருக்கிறார். இதுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பா.ஜ.க.வினரும், பா.ஜ.க. அபிமானிகளும் இந்த பேட்டியை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வைரலாக்கி, தி.மு.க.வினருக்கு சவால் விடுத்து வருகின்றனர்.


Share it if you like it