முத்துபாண்டிக்கு இந்த அசிங்கம் தேவையா?

முத்துபாண்டிக்கு இந்த அசிங்கம் தேவையா?

Share it if you like it

பா.ஜ.க.விற்கு ஆதரவாக நடிகர் சுதீப் செயல்பட கூடாது என நடிகர் பிரகாஷ் ராஜ் சொன்ன அறிவுரையை அவர் புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னடம், தெலுங்கு, தமிழ், என பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர், கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளர் என்பதை அனைவரும் அறிவர். தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆட்சியில் நிகழும் அவலங்களை இவர் சுட்டிக்காட்டுவதில்லை. அதேவேளையில், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஏதேனும் சிறு தவறு நடந்தால் இதற்கு பாரதப் பிரதமர் மோடிதான் காரணம் என குற்றம் சாட்டுவதை வழக்கமாக கொண்டவர்.

அந்த வகையில், கன்னட சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர், எதிர்வரும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு ஆதரவாக செயல்பட போகிறார் என்ற பேச்சு எழுந்தது. இந்த நிலையில், இது போலி செய்தியாக இருக்கும் என நான் நம்புகிறேன் என நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில், பா.ஜ.க.விற்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்வேன். தேர்தலில் போட்டியிட மாட்டேன் என நடிகர் சுதீப் கூறியுள்ளார். இந்த அசிங்கம் பிரகாஷ்ராஜ்க்கு தேவையா என நெட்டிசன்கள் தற்போது கேள்வி? எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it