BJP-யில் வாரிசு அரசியல் இல்லை அதனால் தான் அந்த கட்சி வளர்கிறது பத்திரிக்கையாளர் மணி…!

BJP-யில் வாரிசு அரசியல் இல்லை அதனால் தான் அந்த கட்சி வளர்கிறது பத்திரிக்கையாளர் மணி…!

Share it if you like it

பத்திரிக்கையாளர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவரும், தீவிர கம்யூனிஸ ஆதரவாளர் என்று அனைவராலும் அழைக்கப்படும் நபர் மணி என்பது அனைவரும் அறிந்ததே. பாரதப் பிரதமர் மோடி குறித்தும், பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் குறித்தும் சில கடுமையான வார்த்தைகளை தொடர்ந்து முன் வைக்க கூடிய பல பத்திரிக்கையாளர்களில் இவரும் ஒருவர்.

தமிழகத்தில் பா.ஜ.க வேகமாக வளர்கிறது அதனை வேதனையோடு தெரிவித்து கொள்கிறேன். புதுவையில் ஆட்சிக்கு வந்து விட்டார்கள், இங்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். அண்ணாமலையின் பேச்சை எள்ளி நகையாட வேண்டாம் என்று அண்மையில் அலறி இருந்தார் மூத்த பத்திரிக்கையாளர் மணி.. இந்நிலையில் BJP-யில் வாரிசு அரசியல் இல்லை அதனால் தான் அந்த கட்சி வளர்கிறது என்று ஜபிசி ஊடகத்திற்கு பத்திரிக்கையாளர் மணி அவர்கள் பேட்டியளித்த காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it