பா.ஜ.க பெண் நிர்வாகி மீது தாக்குதல்; ஆளும் கட்சியை சேர்ந்த குண்டர்கள் வெறிச்செயல்!

பா.ஜ.க பெண் நிர்வாகி மீது தாக்குதல்; ஆளும் கட்சியை சேர்ந்த குண்டர்கள் வெறிச்செயல்!

Share it if you like it

பா.ஜ.க மகிளா தலைவரும், வழக்கறிஞருமான பிரசன்னா மீது ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த குண்டர்கள் அவர் மீது கொலை வெறி தாக்குதலை நடத்தி இருப்பது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பண பலம், அதிகார பலம், ஊடக பலம் என அனைத்து பலத்தையும் பயன்படுத்தி தமிழக மக்களையும், பா.ஜ.க-வையும் ஆளும் தி.மு.க அரசு எப்படி அடக்கி, ஒடுக்கி வருகிறதோ அதே போன்றே தெலுங்கானாவிலும் சந்திர சேகர் ராவ் தலைமையிலான அரசு செயல்பட்டு கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் போன்றே அடுத்த பிரதமர் கனவில் இருந்து வரும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான சந்திர சேகர் ராவ் ஆட்சியில் தான், பா.ஜ.க பெண் நிர்வாகி மீது இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ஹனுமந்த் ராவின் வலது கையாக பார்க்கப்படும், மேகலா ஸ்ரீனிவாஸ் என்பவர் மல்காஜ்கிரி நீதிமன்ற வளாகத்தில் இருந்த பா.ஜ.க மகிளா தலைவரும், வழக்கறிஞருமான பிரசன்னா மீது இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தியுள்ளார். இச்சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it