நேற்று கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத். ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற ரவுடி கருக்கா வினோத் என்பவனை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவனிடமிருந்து மேலும் மூன்று குண்டுகளை பறிமுதல் செய்தது விசாரணை மேற்கொண்டு வந்தது காவல்துறை. கடந்த ஆண்டு பாஜக தலைமை அலுவலகம் மீதும் பெட்ரோல் குண்டு வீசி கைதானார் ரவுடி கருக்கா வினோத். இந்நிலையில் இந்த வழக்கினை தற்போது காவல் துறையிடமிருந்து தேசிய புலனாய்வு நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்தின் பின்புலத்தை குறித்து என்.ஐ.ஏ விசாரணை தொடங்கியதாக கூறப்படுகிறது.