10 நிமிஷத்துல 5000 பேரை நான் இறக்கி காட்டவா ? கர்ஜித்த அஸ்வத்தாமன் : கதிகலங்கிய காவல்துறை !

10 நிமிஷத்துல 5000 பேரை நான் இறக்கி காட்டவா ? கர்ஜித்த அஸ்வத்தாமன் : கதிகலங்கிய காவல்துறை !

Share it if you like it

திருவண்ணாமலை மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பாஜகவின் பொதுக்கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கலந்துக்கொண்டு உரையாற்றினார். பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போதே அஸ்வத்தாமன் அவர்களை மல்லப்பள்ளி ஊராட்சியைச் சார்ந்த மக்கள் சந்தித்து, உங்களிடம் மனு கொடுப்பதற்காக ஒருவர் வந்ததாகவும், அவரை மனு கொடுக்க விடாமல் காவல் துறையினர் அழைத்து சென்று விட்டதாகவும், பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமனிடம் அப்பகுதி மக்கள் ஆதங்கத்துடன் முறையிட்டனர். இதனை தொடர்ந்து அஸ்வத்தாமன் காவல்துறையினர் 10 நிமிடத்திற்குள் கைது செய்த நபரை விடுவிக்கவில்லை என்றால் 5000 பேரைத்திரட்டி காவல்துறையின் அராஜகங்களை எதிர்த்து போராட்டம் நடத்துவேன் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் அவர் மேடையை விட்டு இறங்குவதற்குள் அந்த நபர் காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டதாக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *