சத்ரபதி சிவாஜி சிலை சேதம் அடைந்த விவகாரம் – கட்டுமான ஆலோசகர் கைது!

சத்ரபதி சிவாஜி சிலை சேதம் அடைந்த விவகாரம் – கட்டுமான ஆலோசகர் கைது!

Share it if you like it

மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டம் மால்வான் பகுதியில் சத்ரபதி சிவாஜி சிலை சேதம் அடைந்தது தொடர்பாக கட்டுமான ஆலோசகரை போலீஸார் கைது செய்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி, கடற்படை தினத்தை ஒட்டி மகராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜியின் சிலையைத் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில், சிந்துதுர்க் மாவட்டத்தில் பெய்த மழையில் சிலை இடிந்து விழுந்தது. இதுதொர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

கோலாப்பூரை சேர்ந்த கட்டுமான ஆலோசகர் சேட்டன் பாட்டீல், சிலை வடிவமைப்புக்கு ஆலோசனை அளித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *