சீனாவில் வேகமாக பரவும் கொரோனா ஜி ஜின்பிங் அரசிற்கு முட்டு கொடுத்த அருணன் எங்கே?

சீனாவில் வேகமாக பரவும் கொரோனா ஜி ஜின்பிங் அரசிற்கு முட்டு கொடுத்த அருணன் எங்கே?

Share it if you like it

21 நாடுகளில் நீரிலும் நிலத்திலும் தொடர்ந்து எல்லை பிரச்சனையை உருவாக்கி அதன் மூலம் உலகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள முயல்வது ஒருபுறம் என்றால். இன்று உலக நாடுகளையே ரத்த கண்ணீர் வடிக்க வைத்து கொரோனா தொற்று பரவ காரணமான நாடாக சீனா உள்ளது என பலர் இன்று வரை அந்நாட்டின் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.

அண்மையில் 100 கோடி தடுப்பூசிகளை இந்திய மக்களுக்கு செலுத்தி உலக சாதனை புரிந்த மோடி அரசிற்கு இன்று வரை தனது பாராட்டையோ, வாழ்த்துக்களையோ கூறாமல் தொடர்ந்து கள்ள மெளனம் காத்து வரும் இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள். சமீபத்தில் சீன அரசு 200 கோடி டோஸ் தடுப்பூசிகளை தனது நாட்டு மக்களுக்கு செலுத்தியதாக, கூறியதற்கு வாழ்த்து கூறி கொண்டாடியது மட்டுமில்லாமல் இந்திய அரசிற்கு அறிவுரை வழங்கும் அளவிற்கு கம்யூனிஸ்ட் தோழர்கள் செயல்பட்டு வந்தனர்

இந்த நிலையில், சீனாவில் தற்பொழுது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. எதற்கெடுத்தாலும் சீனாவிற்கு முட்டு கொடுத்து வரும் அருணன், சுந்தரவள்ளி, கனகராஜ், போன்ற தோழர்கள் இப்பொழுதாவது சீனா எப்படி நடந்து கொள்ள வேண்டும் எங்கள் நாட்டை பார்த்து சீனா பாடம் கற்று கொள்ள வேண்டும் என்று கூற இவர்கள் முன்வருவார்களா? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it