சில்மிஷம் செய்த பங்கு தந்தை: அதிரடி காட்டிய காவல்துறை!

சில்மிஷம் செய்த பங்கு தந்தை: அதிரடி காட்டிய காவல்துறை!

Share it if you like it

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பங்கு தந்தையை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து இருக்கின்றனர்.

சமீப நாட்களாக கிறிஸ்தவ மிஷநரிகள் போக்ஸோ சட்டத்தில் செய்து வரும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. விடியல் ஆட்சி தமிழகத்தில் அமைந்த பின்பு குறிப்பாக இதுபோன்ற சம்பவங்கள், அதிகரித்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது, உங்கள் அரசு என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்தார். கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இல்லை என்றால் திராவிட மாடல் ஆட்சி அமைந்து இருக்காது என தமிழக சபாநாயகர் அப்பாவு கிறிஸ்தவ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியிருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில் தான், போக்ஸோ சட்டத்தில் பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதுகுறித்து, விவரிக்கிறது இந்த தொகுப்பு.

ராமநாதபுர மாவட்டம் மண்டபம் கோவில்வாடி பகுதியில் அமைந்து உள்ள தேவாலயங்களுக்கு ஜான் ராபர்ட் பங்கு தந்தையாக இருந்து வருகிறார். இவர், தங்கச்சிமடம் பள்ளியில் பயின்று வரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இயைடுத்து, மாவட்ட “சைல்டு லைன் அதிகாரிகள் சிறுமிகளிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர்.

அந்த வகையில், சைல்டு லைன் அதிகாரிகள் மண்டபம் காவல் நிலையத்தில் பாதிரியார் மீது புகார் தெரிவித்து இருக்கின்றனர். இதனை தொடர்ந்து, ஜான் ராபர்ட் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இச்சம்பவம், இராமநாதபுர மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it