ஆஸ்துமா, கேன்சருக்கு அருமருந்து கிராம்பு!

ஆஸ்துமா, கேன்சருக்கு அருமருந்து கிராம்பு!

Share it if you like it

நாம் வாசனைக்காக மட்டுமே பயன்படுத்தும் மசாலா பொருட்களில் ஒன்றான கிராம்பில் எவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்பதைு தெரியுமா? ஆஸ்துமா, கேன்சருக்கு அருமருந்தாக கிராம்பு விளங்குகிறது கிராம்பு. இதன் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.

கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பு ப‌ல் வலிகளை போக்குவதுடன், வயிற்று பொருமலு‌க்கு மிகச் சிறந்த நிவாரணி. ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிப்பதால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன. கிராம்பை பொடி செய்து, வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.

கிராம்பு எண்ணெய் 3 துளியுடன் தேன் மற்றும் வெள்ளை பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்கு போகும் முன்பு சாப்பிட, ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும். 30 மில்லி நீரில் 6 கிராம்புகளை போட்டு கொதிக்க வைத்து, அந்த கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும். அதேபோல, திராட்சை சாறுடன் கிராம்பு, மிளகு ஆகியவற்றை பொடியாக அரைத்து நீருடன் பருகிவர சிறுநீரகக் கோளாறு நீங்கும். துளசிச் சாறுடன் தேன், கிராம்புத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். எலுமிச்சைச் சாற்றுடன் கிராம்பு, ஓமம் பொடியாக்கி குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

வசம்புடன் கிராம்பு வைத்து நீர் தெளித்து விழுதாக அரைத்து தேமல் மீது தடவிவர, தேமல் மறையும். கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குணமாகும். சுக்கு, கிராம்பு இவற்றை எடுத்து கஷாயம் போட்டு 3 வேளை பருகி வந்தால் கை, கால், மூட்டு வலி குணமாகும். கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்த பசையை தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது. கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரை பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

கிராம்பில் உள்ள கூட்டுப்பொருளான பினைல் புரப்போனைடு பொருட்கள் ஆன்டி மியூட்டோஜெனிக் தன்மையை கொண்டுள்ளன. இது செல்களின் மரபணு பிறழ்வுகளை தடுத்து கேன்சர் செல்கள் உருவாகுவதை தடுக்கிறது. நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப காலத்திலேயே சரி செய்ய கிராம்பு பயன்படுகிறது. கிராம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கிறது. உணவில் கிராம்பை சேர்த்து கொண்டு வந்தால் டைப் 1 டயாபெட்டீஸ்யை கட்டுப்பாட்டில் வைக்கிறது. ஏனெனில், கிராம்பில் உள்ள பொருட்கள் இன்சுலினை தூண்டி, ரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது.

ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்தான், அதிக எதிர்ப்பு சக்தியை கொடுப்பவை. உங்கள் உடலை நோய்க் கிருமிகளிலிருந்து பாதுகாப்பது இவைகளின் முக்கிய வேலையாகும். இது நமக்கு நிறைய நன்மைகளை அளிக்கிறது. எனவே, கிராம்பை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால், வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அழற்சி கிருமிகளிலிருந்து நம்மை காக்கிறது. பல்வலி, பல் சொத்தை போன்றவற்றிற்கு கிராம்பு ஒரு சிறந்த மருத்துவராக விளங்குகிறது. இதிலுள்ள, யூஜினால் வலி நிவாரணி மற்றும் ஆண்டி அழற்சி பொருட்கள் இதற்கு துணை புரிகின்றன. மேலும் பற்களை ஒரு சிமெண்ட் போன்று காக்கிறது.

அகவே, கிராம்பை வெறும் வாசனை பொருளாக மட்டும் பயன்படுத்தாமல், மருத்துவ பொருளாக பயன்படுத்துவோம்…


Share it if you like it