காலையில் புகார் : மதியத்திற்குள் தீர்வு : அசத்தும் வானதி சீனிவாசன் !

காலையில் புகார் : மதியத்திற்குள் தீர்வு : அசத்தும் வானதி சீனிவாசன் !

Share it if you like it

கோவை பாஜக சட்டமன்ற உறுப்பினராக திருமதி.வானதி சீனிவாசன் உள்ளார். கோவை மக்களுக்கு அமுதம் திட்டத்தின் கீழ் பசும்பால் வழங்குதல், குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும் கோவை நகரில் பிரச்சனைகள் என்றால் அதனை பற்றி புகார் தெரிவிக்க வாட்ஸப் எண்ணை கொடுத்துள்ளார். அதில் வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்கிறார்.

இந்நிலையில் கோவை தெற்கு தொகுதி 80வது வார்டு பெரிய கடை வீதியில் அதிகளவில் குப்பை தேங்கியுள்ளதாக புகார் வந்துள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக தேங்கியிருந்த குப்பைகளை அப்புறப்படுத்தி அதனை சமூக வலைத்தளமான எக்ஸ் ல் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக கோவை தெற்கு தொகுதி 80வது வார்டு வைசியாள் வீதி – சலீவன் வீதி சந்திப்பில் உப்பு தண்ணீர் குழாய் உடைந்துள்ளதாக புகார் வந்துள்ளதை தொடர்ந்து உடனடியாக சரி செய்து புதிய உப்பு தண்ணீர் குழாய் போடப்பட்டுள்ளதாக அவருடைய எக்ஸ் பதிவில் பகிர்ந்தார்.

மேலும் தன் தொகுதியில் எத்தனை நாட்கள் தான் இருந்ததாகவும், எத்தனை புகார்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது எத்தனை புகார்கள் நிலுவையில் உள்ளது என புள்ளி விவரத்துடன் பகிர்ந்துள்ளார்.

blank

Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *