சத்தீஷ்கர் மாநிலத்தில் ஜெகதால்பூர் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.26,000 கோடி மதிப்பிலான நலத்திட்ங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர், பின்னர் நடைபெற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசினார். காங்கிரஸ் கட்சி ஒரு வெளிநாட்டுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாகவும் பாரதத்திற்கு எதிராக பேசுவதில் அக்கட்சி மகிழ்ச்சியடைவதாகவும் பிரதமர் அப்போது பகிரங்கமாக குற்றம்சாட்டினார். சதீஸ்கர் காங்கிரஸ் அரசை கடுமையாகசாடிய பிரதமர், அரசுவிழாவில் முதலமைச்சர் பூபேஷ் பாகல் கலந்த கொள்ளாமல் இருந்தது குறித்து விமர்சித்தார். ஆட்சி பறிபோகும் கலக்கம் மற்றும் கழுத்தளவு ஊழல் ஆகிய இரண்டு காரணங்களால் முதலமைச்சர் பூபேஷ் பாகல் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.