காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் படுமோசம் : கல்விக்கு வழியில்லாமல் சுரங்கத்தில் வேலை –  நடிகர் பரத் பகீர் !

காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் படுமோசம் : கல்விக்கு வழியில்லாமல் சுரங்கத்தில் வேலை – நடிகர் பரத் பகீர் !

Share it if you like it

பிரபல நடிகர் பரத் அவர்கள் தனியார் ஊடக சேனல் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் நடிகர் பரத் சொல்லும் கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.அந்த பேட்டியில், ஊடகவியலாளர் நடிகர் பரத்திடம், ஜார்க்கண்ட், கொல்கத்தா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களோடு தமிழ்நாடு ஒப்பிடுகையில் அங்கு உள்ள மக்கள் மற்றும் அவர்களின் பிரச்சனைகள், அவர்களின் வாழ்வியல் எப்படி இருக்கு ? என்று கேட்டார்.

அதற்கு நடிகர் பரத், நான் ஜார்க்கண்ட், மேற்கு வங்கம்,பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று வந்தேன். ஆனால் அங்குள்ள மக்களின் வாழ்வியலோடு வாழ்வது மிகவும் கடினம். ஏனெனில் அவர்கள் மிகுந்த வறுமையில் உள்ளனர். நீங்க குறிப்பாக கொல்கத்தா நகரை பார்த்தால் கூட ஒரு பக்கம் பாலம் மற்றும் சில விஷயங்கள் இருந்தாலும் அதன் மறுபக்கம் பார்த்தால் மிகவும் மோசமாக உள்ளது. அதனுடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டால் நாம் மிகவும் வளர்ந்துள்ளோம்.

குறிப்பாக ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மாநிலத்தில் மிகவும் மோசமாக உள்ளது. அங்குள்ள குழந்தைகள் கல்விக்கு கூட வழியில்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்கிறார்கள். குழந்தையை தூளியில் தன் உடம்பில் கட்டி கொண்டு அங்குள்ள பெண்கள் வேலை செய்கிறார்கள். அந்த குழந்தை உடல் முழுவதும் கரியோடு இருக்கு. சிறிய குழந்தை ஒரு வயது தான் இருக்கும். இவ்வாறு அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

இதில் ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் என்று குறிப்பாக பார்த்தால் காங்கிரஸ் கட்சியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மம்தா பானர்ஜி தான் முதல்வராக இருந்து வருகிறார்கள். நடிகர் பரத் கூற்றுப்படி பார்த்தால், காங்கிரஸ் திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி தான் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. அவர்கள் தங்கள் மாநிலங்களை முன்னேற்ற எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளமால் ஊழல் மேல் ஊழல் செய்து மக்களை வறுமையில் வைத்துள்ளார்.


Share it if you like it