ஆண்டவரை மட்டும் நம்பினால்  உதவி செய்ய வருவார்: மற்ற தெய்வங்களை வழிபட்டால் அவருக்கு பிடிக்காது… பாதிரியார் சொன்ன புதுதகவல்!

ஆண்டவரை மட்டும் நம்பினால் உதவி செய்ய வருவார்: மற்ற தெய்வங்களை வழிபட்டால் அவருக்கு பிடிக்காது… பாதிரியார் சொன்ன புதுதகவல்!

Share it if you like it

இயேசுவை மட்டும் நம்பினால் தான் அவர் உதவி செய்வார். மற்ற தெய்வங்களை வழிபடும் நபர்களை அவர் திரும்பி கூட பார்க்க மாட்டார் என கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏசுபிரான் கூறிய நற்கருத்துக்களை, மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியவர்கள் கிறிஸ்தவ பாதிரியார்கள். ஆனால், இன்றைய நிலையோ படுமோசமாக உள்ளது. தமிழகத்தை சேர்ந்த பெரும்பாலான கிறிஸ்தவ பாதிரியார்கள் தி.மு.க.வின் ஆசி பெற்றவர்களாக இருக்கிறார்கள். அமைதியை தேடி சபைகளுக்கு வரும் கிறிஸ்தவ மக்களிடம், பா.ஜ.க. குறித்து அவதூறு பரப்புவதே பல பாதிரியார்களின் தொழிலாக மாறியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, எஸ்றா சற்குணம், மோகன் சி லாசரஸ், ஜெகத் கஸ்பர் உள்ளிட்டவர்களின் செயல்பாடுகளும், பேச்சு அமைந்துள்ளன.

இதுஒருபுறம் இருக்க, அந்நிய நாட்டில் இருந்து வரும் பணத்திற்கு ஆசைப்பட்டு இங்குள்ள ஏழை மக்களை வாழும் நாட்டிற்கு எதிராக திசை திருப்புவதே மதமாற்றம். அப்பாவி மக்களின் மண்டையை கழுவி தங்களின் சுயநலத்திற்காக தூண்டி விடுவதே மதமாற்றம். பிரிவினை சக்திகளுக்கு துணை போவதே மதமாற்றம். இப்படியாக, மதமாற்றத்தின் தீமையை குறித்து சொல்லி கொண்டே போகலாம். இதுதவிர, மாற்று மதத்தில் உள்ள மக்களை நம்ப வைக்கும் விதமாக பல்வேறு உத்திகளை மதமாற்றும் பாதிரியார்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்தவகையில், கீழ்கண்ட காணொளியை சொல்லலாம். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it