சேதமடைந்த வாழை : இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை !

சேதமடைந்த வாழை : இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை !

Share it if you like it

கடலூர் அருகே திடீரென வீசிய சூறைக்காற்றில் ஏராளமான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

கடலூர் மாவட்டம், சம்பட்டிகுப்பம், ராமாபுரம் மற்றும் சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட 15 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அப்பகுதிகளில் திடீரென இடியுடன் பலத்த சூறைக்காற்று வீசியதால், அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன.

எனவே, “சேதமடைந்த வாழை மரங்களைக் கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *