தமிழகத்தில் ஒரு நிர்பயா?

தமிழகத்தில் ஒரு நிர்பயா?

Share it if you like it

வேலூரில் நடந்த சம்பவம், டெல்லி பேருந்தில் காமுக கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயாவை நினைவூட்டும் வகையில் இருப்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

டெல்லி… 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி… 23 வயதான மருத்துவ மாணவி… வெளியில் சென்று தனது ஆண் நண்பருடன் நள்ளிரவு வீடு திரும்புகிறார். ஆட்டோ போன்ற வாகனங்கள் எதுவும் கிடைக்காததால் அவ்வழியாக வந்த பேருந்தில் இருவரும் ஏறுகின்றனர். அப்போது, பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பஸ்ஸில் இருந்த 4 பேர் சேர்ந்து, அந்த ஆண் நண்பரை தாக்கிவிட்டு, நிர்பயாவை பஸ்ஸிலேயே சூறையாடினர். இதில், மைனர் சிறுவன் ஒருவனும் அடக்கம் என்பதுதான் வேதனை. பின்னர், நிர்பயாவையும், அந்த ஆண் நண்பரையும் பஸ்ஸிலிருந்து கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர். எனினும், பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். இதில், அந்த மைனர் சிறுவன் மட்டும் தப்பித்துக் கொண்டான்.

இதே கதைதான் தற்போது வேலூர் பெண் மருத்துவர் விஷயத்திலும் நடந்திருக்கிறது என்பதுதான் வேதனை. வேலூரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் அவர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர், தனது ஆண் நண்பருடன் வெளியில் சென்று விட்டு மீண்டும் திரும்புகிறார். அப்போது, அங்கு ஒரு ஆட்டோ வருகிறது. (டெல்லியில் பஸ், இங்கு ஆட்டோ). அந்த ஆட்டோவில் 5 பேர் இருக்கிறார்கள். (டெல்லி பஸ்ஸில் 6 பேர்). இதனால், தயங்கியபடி நிற்கிறார்கள் இருவரும். ஆனால், அந்த ஆட்டோவில் இருந்தவனோ, இது ஷேர் ஆட்டோதான், ஏறுங்கள் என்று அழைக்கிறான். உடனே, இருவரும் அந்த ஆட்டோவில் ஏறுகிறார்கள். ஆட்டோ புறப்படுகிறது. ஆனால், அது மருத்துவமனையை நோக்கிச் செல்லாமல் வேறொரு பாதையில் செல்கிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த இருவரும் கூச்சலிடுகிறார்கள். ஆனால், அந்த இரவு நேரத்தில் அவர்களைக் காப்பாற்ற யாருமே இல்லை. அப்போது, ஆட்டோவில் இருந்தவர்கள் சேர்ந்து அந்த ஆண் நண்பரை தாக்கி கீழே தள்ளிவிட்டு, பாலாற்றங்கரையோரம் ஆட்டோவை செலுத்துகிறார்கள். அங்கு அந்த 5 பேரும் சேர்ந்து பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். பின்னர், அந்த பெண் மருத்துவரிடமிருந்த ஏ.டி.எம். கார்டு, செல்போன், பணம், நகை ஆகியவற்றை பறித்துக் கொண்டு, அந்த பெண் மருத்துவரை மிரட்டி அனுப்பி விட்டு, இவர்களும் எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள். இதில், வேதனை என்னவென்றால், டெல்லி சம்பவத்தில் ஒரு மைனர் சிறுவன் ஈடுபட்டதுபோல, இந்த சம்பவத்தில் 3 மைனர் சிறுவர்கள் ஈடுபட்டிருப்பதுதான்.

ஆனால், இதுகுறித்து யாருமே புகார் செய்யவில்லை என்பதுதான் வேடிக்கை. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் மானம் மரியாதைக்கு பயந்து இதை வெளியில் சொல்லவில்லை. அதேசமயம், முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே விளையும் என்பதுபோல, பெண் டாக்டரிடம் அத்துமீறிய அந்த மைனர் கும்பல், கஞ்சா போதையில் ஒருவருக்கொருவர் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த போலீஸார் விசாரித்தபோதுதான், மேற்படி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதையடுத்து, அந்த மூவரையும் கைது செய்ய போலீஸார், இச்சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற இருவரையும் தேடிக் கண்டுபிடித்து கைது செய்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க. ஆட்சியின் அதிரடியால் ரவுடி கும்பல் அடங்கிக் கிடந்தது. ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அக்கும்பல் தனது வேலையைக் காட்டத் தொடங்கி விட்டது. சமீபகாலத்தில் மட்டும் 3-க்கும் மேற்பட்ட பாலியல் பலாத்கார சம்பவங்கள், 5-க்கும் மேற்பட்ட கொலைகள் என ரவுடி கும்பலின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது.


Share it if you like it