பட்டப்பகலில் காரை வழிமறித்து துப்பாக்கி முனையில் கொள்ளை!

பட்டப்பகலில் காரை வழிமறித்து துப்பாக்கி முனையில் கொள்ளை!

Share it if you like it

டெல்லியில் பட்டப்பகலில் பரபரப்பான சுரங்கச் சாலையில் காரை மறித்து துப்பாக்கி முனையில் 2 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தலைநகர் டெல்லியின் சரை ஹலிகான் பகுதியையும், நொய்டாவையும் இணைக்கும் சாலையில், 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரஹதி மெய்டன் என்கிற சுரங்கச்சாலை அமைந்திருக்கிறது. இந்த சுரங்கச் சாலையில் கடந்த 24-ம் தேதி சென்று கொண்டிருந்த காரை, 2 டூவீலர்களில் தலா 2 பேர் வீதம் 4 பேர் பின்தொடர்ந்து வந்தனர். அப்போது, ஒரு டூவீலரில் வந்த 2 பேர் காரை முந்திச் சென்று வழிமறிக்க, இன்னொரு டூவீலரில் வந்த 2 பேரும் காரின் பக்கவாட்டில் வந்து மறித்தனர்.

கொள்ளையர்கள் 4 பேருமே ஹெல்மெட் அணிந்திருந்தனர். காரை வழிமறித்த பின்னர், டூவீலரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த 2 பேரும் கீழே இறங்கிச் சென்றினர். ஒருவன் துப்பாக்கியைக் காட்டி காரில் இருந்தவர்களை மிரட்ட, மற்றொருவன் காரில் வந்தவரிடம் இருந்த பையை பறித்துக் கொண்டான். அந்தப் பையில் 2 லட்சம் ரூபாய் இருந்ததாகக் கூறப்படுகிறது. பிறகு, 4 பேரும் டூவீலரில் தப்பிச் சென்றனர். பட்டப்பகலில் பரபரப்பான சுரங்கச்சாலையில் துப்பாக்கி முனையில் காரில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


Share it if you like it