முஸ்லீம்கள் வெகுண்டெழுந்தால்… மிரட்டும் மதகுரு!

முஸ்லீம்கள் வெகுண்டெழுந்தால்… மிரட்டும் மதகுரு!

Share it if you like it

முஸ்லீம்கள் வெகுண்டெழுந்தால் எந்த அரசாங்கமும் அவர்களை அடக்க முடியாது என்று இஸ்லாமிய மதகுரு மிரட்டல் விடுத்திருப்பது நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது..

டெல்லி ஜஹாங்கிர்புரியில் ஏப்ரல் 16-ம் தேதி நடந்த ஹனுமன் ஜெயந்தி விழாவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கல்வீசியும், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களால் தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஜஹாங்கிர்புரியில் இஸ்லாமியர்ள் ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகள், கடைகளை புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளியது டெல்லி மாநகராட்ி. இதற்கு பின்னணியில் மத்திய பா.ஜ.க. அரசு இருப்பதாக இஸ்லாமியர்கள் குற்றம்சாட்டினர். ஆனால், ஜஹாங்கிர்புரி மட்டுமல்ல டெல்லி முழுவதுமே ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவிருக்கின்றன. இது வழக்கமான நடைமுறைதான். கோர்ட் அனுமதியோடுதான் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன என்று மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனிடையே, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு 2 வாரகால தடை விதித்திருக்கிறது கோர்ட்.

இந்த நிலையில்தான், டெல்லி மாநகராட்சியின் புல்டோசர் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியிருக்கிறார் இஸ்லாமிய மதகுரு ஒருவர். உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் இஸ்லாமிய மதகுரு மௌலானா தௌகிர் ராசா. காங்கிரஸ் கட்சியை ஆதரித்து வருகிறார். இவர்தான் முஸ்லீம்கள் வெகுண்டெழுந்தால் எந்த அரசாங்கமும் அடக்க முடியாது என்று கூறியிருக்கிறார். இத்திஹாத்-இ-மில்லத் கவுன்சில் கட்சியின் தலைவரான மௌலானா தௌகிர் ராசா கூறுகையில், “தற்போது ரம்ஜான் பெருநாள் காலம். இன்னும் 10 நாட்களில் பெருநாள் முடிந்து விடும். அதற்குள் அரசாங்கம் தனது செயற்பாடுகளை சீர்படுத்த வேண்டும். இல்லையெனில், அல்லாஹ் நாடினால் டெல்லியில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும். அல்லாஹ் நாடினால் நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தைத் தொடங்குவோம். ஹிந்துக்கள், முஸ்லிம்கள் உட்பட நாட்டை நேசிக்கும் அனைத்து மக்களும் இதில் பங்கேற்பார்கள்.

நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பரஸ்பர சகோதரத்துவத்தில் நம்பிக்கை கொண்ட அனைத்து மாநிலங்களின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்பார்கள். நீங்கள் எங்களுடன் வாழ விரும்பவில்லை, நாங்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்பதால் நாங்கள் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். பாகிஸ்தான் எங்களை ஏற்காது. பங்களாதேஷ் எங்களை ஏற்றுக்கொள்ளாது. சீனா எங்களை ஏற்றுக்கொள்ளாது. நாங்கள் எங்கே போவோம்? அரசு எங்கள் பேச்சைக் கேட்காது. நீதித்துறையில் இருந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. நீதிமன்றங்களில் பல வகையான தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன… நீதிமன்றங்களின் தீர்ப்புகள்கூட புறக்கணிக்கப்படுவதை நான் காண்கிறேன். எந்த இடத்தில் குற்றம் நடந்தாலும், யாரேனும் குற்றம் சாட்டப்பட்டாலும் அந்த இடத்திலேயே தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.

குற்றம் சாட்டப்பட்டவருக்கும் குற்றவாளிக்கும் வித்தியாசம் உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் மீது புல்டோசர்களை இயக்குவது அநீதியாகும். இந்த அரசாங்கம் இதுபோன்ற அநீதியை தொடர்ந்து செய்தால், நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெரியதாக மாறும். முஸ்லிம்கள் வீதிக்கு வரும் நாளில், அவர்கள் கட்டுப்படுத்த முடியாதவர்களாக இருப்பார்கள் என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, அரசாங்கத்தையும், குறிப்பாக நரேந்திர மோடியையும் நான் எச்சரிக்கிறேன். எங்கள் அனைவருக்கும் நீங்கள்தான் பிரதமர். உங்கள் நாட்டில் இதுபோன்ற செயல்கள் நடக்கின்றன. நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களா? உங்களால் எப்படி அமைதியான பார்வையாளராக இருக்க முடியும், ஒருவேளை காது கேளாதவராகவும் இருக்கலாம்? நீங்கள் மகாபாரதத்தில் வரும் திருதராஷ்டிரர் போல் தெரிகிறது. அவன் பெயர் என்ன? மகாபாரதத்தில் குருடனா? அவரும் அப்படியே இல்லையா?

எனவே, திருதராஷ்டிரன் பார்வையற்றவராகவும், காது கேளாதவராகவும் இருக்காமல் இருந்திருந்தால், எல்லா அக்கிரமங்களையும் அங்கே நடக்க அனுமதிக்காமல் இருந்திருந்தால், மகாபாரதப் போர் நடந்திருக்காது. அதேபோல், நரேந்திர மோடியும் திருதராஷ்டிரரின் குணாதிசயத்தை விட்டுவிடவில்லை என்றால், இந்தியாவில் நடக்கக்கூடிய மகாபாரதத்தை யாராலும் தடுக்க முடியாது” எனறு மிரட்டல் விடுத்திருக்கிறார். மௌலானா தௌகிர் ராசா முஸ்லிம்களை தூண்டிவிட்டு மிரட்டல் விடுப்பது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே, ஜனவரி 8ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் 20 லட்சம் முஸ்லிம்கள் கூட்டத்தில் உரையாற்றிய போது, முஸ்லிம்களின் ஆத்திரம் வெடிக்கும் நாளில், ஹிந்துக்கள் எங்கும் தப்பித்துச் செல்ல முடியாது என்று பகிரங்கமாக கூறினார். ஆகவே, இதுபோன்று வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் நபர்களை உடனை கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்.

கடந்த 3 ஆண்டுகளாக பல மறைக்கப்பட்ட வரலாறுகள், சொல்லப்படாத உண்மை செய்திகள் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்ததில் மீடியான் பெருமை கொள்கிறது. இப்பணி சிறப்பாக, தரமாக தொடர உங்கள் ஆதரவு அவசியம். மீடியான் குடும்பத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கரம் சேர்ப்போம்.

blank


Share it if you like it