அறப்பணி செய்தவரை அன்புள்ளத்தோடு பாராட்டிய தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி !

அறப்பணி செய்தவரை அன்புள்ளத்தோடு பாராட்டிய தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி !

Share it if you like it

அரூர் அடுத்த தீர்த்தமலை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மே மாதம் 2024 ‌வரை 36 ஆண்டுகள், ஒரே இடத்தில் தொடர்ந்து பணிபுரிந்த கலையரசன் என்பவர் மருத்துவ உதவியாளராக பணியாற்றி, அரூர் சுற்று வட்டார பகுதிகளில், பெரியவர், தொழு நோயாளிகள், ராணுவ வீரர்கள், குழந்தைகள் என ஏழை எளிய மக்களுக்கு கண் பார்வை கிடைக்க சிறந்த சேவையாற்றி, கடந்த மே 30-ம் தேதி பணி நிறைவு பெற்றுள்ளார்.

இதனையறிந்து கண் மருத்துவ உதவியாளர் கலையரசனின் சேவையை பாராட்டும் வகையில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு அழைத்து, மாவட்ட ஆட்சியர் ‌ கி.சாந்தி பாராட்டி, வாழ்த்து தெரிவித்து, நினைவு பரிசு வழங்கினார். இந்த கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் கவுரவ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.பால் பிரின்ஸிலி ராஜ்குமார், மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர்.ஜெயந்தி, வருவாய் கோட்டாட்சியர்கள் இரா.வில்சன் ராஜசேகர்(அரூர்), காயத்ரி(தருமபுரி) உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *