எகிறி அடிக்கும் அண்ணாமலை… பதறித் துடிக்கும் அ.தி.மு.க., தி.மு.க.: பத்திரிகையாளர் மணி அட்டாக்!

எகிறி அடிக்கும் அண்ணாமலை… பதறித் துடிக்கும் அ.தி.மு.க., தி.மு.க.: பத்திரிகையாளர் மணி அட்டாக்!

Share it if you like it

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வால் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை சமாளிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை என்று மூத்த பத்திரிகையாளர் மணி கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த மணி, “இன்னும் அதிகமாக தி.மு.க. ஃபைல்ஸ் வெளியிடுவேன். இன்னும் பல ஆடியோக்கள், வீடியோக்கள் வெளிவரும். என்னை யாரும் ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது என்று அண்ணாமலை துணிச்சலாகச் சொல்கிறார். அப்படி என்றால் தி.மு.க.வின் வீக்னலை அண்ணாமலை புரிந்துகொண்டார் என்றுதானே அர்த்தம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அண்ணாமலையை பார்த்து பயப்படுகிறது, சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது என்பதே உண்மை.

அதேபோல, அ.தி.மு.க. ஃபைல்ஸையும் வெளியிடுவேன் என்று கூறிய அண்ணாமலையை பக்கத்தில் வைத்துக் கொண்டு, எடப்பாடியையும் உட்கார வைத்து பேசுகிறார்கள் என்றால் என்ன அர்த்தம். ஒழுங்கா அண்ணாமலை சொல்வதை கேட்டுக் கொண்டு இருங்கள் என்பதுதானே. அதேபோல, அமித்ஷா மற்றொன்றையும் தெளிவுபடுத்தி அனுப்பி இருக்கிறார். 2019 நாடாளுமன்றத் தேர்தலைப் போல் நீங்கள் கொடுப்பதை நாங்கள் வாங்கிக் கொள்ள மாட்டோம். எங்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொள்வோம் என்று கூறியிருக்கிறார்” என்று மணி கூறியிருக்கிறார்.

மூத்த பத்திரிகையாளர் மணி இன்னும் என்னவெல்லாம் சொன்னார் என்பதை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோவை கிளிக் செய்யுங்கள்…


Share it if you like it