விம்மி, விம்மி, அழுத தி.மு.க வேட்பாளர் பகுத்தறிவு கட்சிக்கு வந்த சோதனை..?

விம்மி, விம்மி, அழுத தி.மு.க வேட்பாளர் பகுத்தறிவு கட்சிக்கு வந்த சோதனை..?

Share it if you like it

தி.மு.க.,வை சேர்ந்த வேட்பாளர்கள், எப்படியாவது. வெற்றி பெற்று விட, வேண்டும் என்பதற்காக. தமிழக மக்களை எப்படி எல்லாம், ஏமாற்றி வருகின்றனர். என அரசியல் நோக்கர்கள், முதல் மக்கள் வரை வெளிப்படையாகவே, கருத்து கூறும் நிலை ஏற்பட்டு உள்ளது என்பது நிதர்சனம்.

தி.மு.க-விற்கு ஓட்டு போடவில்லை என்றால், வாந்தி, பேதி, ஏற்படும். தொகுதி மக்களுக்கு சூன்யம் வைத்து உள்ளேன். என்று தி.மு.க வேட்பாளர் ஒருவர், கூறிய காணொளி. இன்று வரை சமூக வலைத்தளங்களில். வைரலாகி வரும் நிலையில். மீண்டும் ஒரு கூத்தை தி.மு.க வேட்பாளர், அரங்கேற்றியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற தொகுதியில். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தி.மு.க சார்பில்  தென்னலூர் பழனியப்பன் என்பவர் போட்டியிடுகிறார். கடந்த முறை இவர் விஜய பாஸ்கரிடம் தோல்வியை தழுவியவர்.

மீண்டும் இவருக்கு தி.மு.க சார்பில் போட்டியிடும் வாய்ப்பை அக்கட்சி வழங்கியுள்ளது. ஒரே ஒரு முறை எனக்கு, வாய்ப்பு கொடுங்கள். என்று கண்ணீர் விட்டு கதறி அழுது உள்ளார் தி.மு.க வேட்பாளர்.

இந்த தேர்தல் தனக்கு கடைசி, தேர்தல். 30 ஆண்டு காலம் அரசியலில் இருந்து மக்களுக்காக உழைத்து உள்ளேன். இந்த ஒரு முறை மட்டும், வாய்ப்பு தாருங்கள். என்று ஊருக்கே பகுத்தறிவை போதிக்கும், கட்சியின், வேட்பாளர் விம்மி, விம்மி, அழுத சம்பவம். மக்கள் மத்தியில் அனுதாபத்தை, ஏற்படுத்தாமல் கடும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it