தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்ட திருத்தத்திற்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, தி.மு.க. அரசு அம்முடிவை தற்போது நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்களை பயன்படுத்த விடியல் அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த சமூக சீர்கேட்டிற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். குறிப்பாக, சமூக ஆர்வலர்கள் தி.மு.க. அரசை வெளுத்து வாங்கியிருந்தனர். தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, திருமண மண்டபங்களில் மது பரிமாறும் சட்டத்திருத்தத்தை ஸ்டாலின் அரசு இன்று நீக்கியுள்ளது. இது, தமிழக பா.ஜ.க.விற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.