தொடர்ந்து ஜாதியை இழிவுபடுத்தும் திமுக : ஈவேரா வழியை பின்தொடரும் திமுக !

தொடர்ந்து ஜாதியை இழிவுபடுத்தும் திமுக : ஈவேரா வழியை பின்தொடரும் திமுக !

Share it if you like it

பிரதமர் மோடி அமைச்சரவையில் ராஜ்யசபா எம்பிக்களாக ஜெய்ஷங்கர், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி உள்ளிட்டோர் தொடர்ந்து நீடித்து வருகின்றனர். இதனால் இண்டி கூட்டணியில் உள்ள சிலர் பாஜக அமைச்சர்களை பற்றி அவதூறு கருத்துக்கள் கூறி வருகின்றனர்.

நியூஸ் 18 தமிழ்நாடு நடத்திய தொலைக்காட்சி செய்தி விவாதத்தில் பங்கேற்ற திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை பற்றியும் பிராமண சமூகத்தையும் மிகவும் அவதூறாக பேசியுள்ளார். அதில் 3 சதவீதம் இருக்கும் நூலிபான்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை கூட 18 சதவீதம் இருக்கும் முஸ்லீம்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என பேசியுள்ளார்.

இவ்வாறு திமுகவினர் அமைச்சர் நிர்மலா சீதாராமனை இவ்வாறு இழிவாக பேசுவது முதல்முறை அல்ல. திமுக அமைச்சர் தயாநிதி மாறன் பொதுமேடையில் பேசும்போது “நிர்மலா மாமி” என்று பிராமண சமூகத்தை இழிவுபடுத்தி பேசினார். இவர்கள் மட்டும் இல்லாமல் பல திமுக நிர்வாகிகளும் தரக்குறைவாக பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *