தி.மு.க.வை மீண்டும் சீண்டிய திருமாவளவன்!

தி.மு.க.வை மீண்டும் சீண்டிய திருமாவளவன்!

Share it if you like it

திராவிட தேசியம் என்பது கிடையாது. அதுவெறும் கற்பனை என வி.சி.க. தலைவர் திருமாவளவன் பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து வருகிறது. எனினும், அக்கட்சிக்கு உரிய அங்கீகாரத்தை ஆளும் கட்சி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து, தி.மு.க.வை சீண்டும் வகையில் திருமாவளவன் தொடர்ந்து பேசி வருகிறார். இப்படிப்பட்ட சூழலில், அவர் பேசிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அக்காணொளியில் திருமா பேசியதாவது ;

திராவிட தேசியம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. அது, ஒரு கற்பனை. திராவிட தேசியம் யார்? சொன்னது. ஏது? திராவிட தேசியம். இவர்களாக, கற்பனை செய்து கொண்டார்கள். திராவிட நிலபரப்பு கிடையாது. திராவிட இனம் என்ற ஒன்று கிடையவே கிடையாது என வி.சி.க. தலைவர் திருமாவளன் பேசியிருப்பது தி.மு.க. கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன், பா.ஜ.க. மற்றும் சனாதன அமைப்புகளோடு கூட்டணி அமைக்கத் தயார் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it