மாஜி அதிகாரி அரசுக்கு வேண்டுகோள்!

மாஜி அதிகாரி அரசுக்கு வேண்டுகோள்!

Share it if you like it

கோவில் சிலைகள் தொடர்பாக, முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி பொன்மாணிக்க வேல் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் நேற்றைய தினம் உலக சிவனடியார்களுக்கு சங்க அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாஜி காவல்துறை உயர் அதிகாரி பொன்மாணிக்க வேல் கலந்து கொண்டார்.

இதையடுத்து, அவர் பத்திரிகையாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார் ; தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில், சிலைகளை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு அறைகள் கட்ட, தமிழக அரசு ரூ. 340 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆனால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில், பாதுகாப்பு அறைகள்  இன்னமும் கட்டப்படவில்லை. ஒரே ஒரு கோவிலில் மட்டும் சிலை பாதுகாப்பு அறை கட்டப்பட்டு, அதுவும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களில், பல கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நகைகள் உள்ளன. அதன் விபரங்களை, அரசு அறிக்கையாக வெளியிட வேண்டும். கோவில்களிலிருந்து கடத்தப்பட்டு, மீட்கப்பட்ட சிலைகளை, மீண்டும் அந்தந்த கோவில்களிலேயே வைக்க வேண்டும். அதனை பக்தர்கள் வழிபடச் அரசு ஆவணம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Share it if you like it