புகார் கொடுக்க வந்த மூதாட்டி… ஆபாசமாக திட்டி வெளியே தள்ளிய காவலர்!

புகார் கொடுக்க வந்த மூதாட்டி… ஆபாசமாக திட்டி வெளியே தள்ளிய காவலர்!

Share it if you like it

தனது மருமகள் மீது புகார் தெரிவிக்க வந்த மூதாட்டியை காவலர் ஒருவர் வெளியே பிடித்து தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, பொதுமக்களிடம் தமிழக காவல்துறையினர் நடந்து கொள்ளும் விதம் அனைவரும் முகம் சுளிக்கும் வகையில் இருந்து வருகிறன. அந்தவகையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கிறது.

அதாவது, மூதாட்டி ஒருவர் தனது மருமகள்கள் தம்மை சரியாக பராமரிக்கவில்லை என பள்ளிபாளைய காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க சென்றுள்ளார். அப்போது, மூதாட்டியின் புகாரை ஏற்காமல் காவல்துறையினர் அலைக்கழித்துள்ளனர். இதனால், மனமுடைந்த மூதாட்டி காவல்நிலைய வாசலில் அமர்ந்து அழுதுள்ளார்.

காவல் நிலைய வாசலில் பாட்டி அமர்ந்து இருப்பதை பார்த்து இரு காவலர்கள் வெளியே வந்துள்ளனர். இதில், ஒரு காவலர் கோபமாக ’ஏய் எந்திரி மேல இது என்ன தெருவா என்று திட்டியிருக்கிறார். மேலும், வயதான மூதாட்டி என்றும் கூட பார்க்காமல் அவரை பிடித்து வெளியே தள்ளிய சம்பவம் தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனை, யாரோ ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, இக்காணொளி தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it