நேற்றைய தினம் ஒரே நாளில் தமிழகத்தில் 9 கொலைகள் நடந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு ஊர் சிரிக்கும் வகையில் இருக்கும். அதனை மெய்ப்பிக்கும் வகையில், நாள்தோறும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிபறி நடந்து வருகின்றன. இதனை, கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் இன்று வரை திணறி வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், பிப் -13 நேற்றைய தினம் மட்டும் ஒரே நாளில் 9 கொலைகள் நடைபெற்றுள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் நடைபெற்ற கொலை விவரங்கள் இதோ : கோவையில் – 2, செங்கல்பட்டில் – 2, தென்காசியில் – 1, சிவகாசியில் – 2, கன்னியாகுமரியில்- 1, திண்டுக்கல்லில் – 1 என 9 கொலைகள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன.