தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் பிறந்த நாள் கடந்த மார்ச் 1- ஆம் தேதி சென்னை அறிவாலயத்தில் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், தி.மு.க. தொண்டர்கள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்து பரிசு பொருட்களை வழங்கினர்.
அந்த வகையில், முதல்வர் ஸ்டாலினுக்கு தொண்டர் ஒருவர் ஒட்டகத்தை பரிசாக வழங்கினார். இதையடுத்து, அந்த ஒட்டகம் திருவள்ளூரில் உள்ள முதல்வரின் உறவினரின் தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஒட்டகத்தின் கழுத்தில் முடி உதிர்வு பிரச்சனை ஏற்பட்டு அது சோர்வாக காணப்பட்டது.
இதையடுத்து, அதனை ஊத்துக்கோட்டையில் உள்ள தனியார் விலங்குகள் நல அமைப்பிடம் மேற்சிகிச்சை மற்றும் தொடர் பராமரிப்பிற்காக ஒப்படைத்துள்ளனர்.
முதல்வருக்கு தான் முடி பிரச்சனை என்றால் ஒட்டகத்திற்குமா? என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.