மீண்டும் சர்ச்சையில் சிக்கிய Throwing அமைச்சர்!

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய Throwing அமைச்சர்!

Share it if you like it

பால்வளத்துறை அமைச்சர் நாசரின் செருப்பை ஒருவர் கையில் வைத்திருந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலினை ஒரு பொருட்டாக மதிக்காமல் அமைச்சர்கள் தங்களது மனம் போன போக்கில் செயல்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக, தி.மு.க. அமைச்சர்கள் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இப்படிப்பட்ட சூழலில், துறை ரீதியான மானிய கோரிக்கை தொடர்பான புதிய அறிவிப்புகளை அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் வைத்து அமைச்சர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், பால்வளத்துறை அமைச்சர் நாசர் மரியாதை செலுத்தினார். அப்போது, அமைச்சரின் காலணியை ஒருவர் கையில் எடுத்து வந்த காரில் வைத்துள்ளார். இச்சம்பவம் தான், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சமூகநீதி, சுயமரியாதை என ஊருக்கு பாடம் நடத்தும் தி.மு.க. தனது அமைச்சர்களுக்கு எப்போது பாடம் நடத்தும்? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  


Share it if you like it