சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு… VAO கொடூர  கொலை!

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு… VAO கொடூர கொலை!

Share it if you like it

தூத்துக்குடியில் வி.ஏ.ஓ. கொடூர முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு பொதுமக்கள் அச்சத்துடனும், பயத்துடனும் வாழும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த அளவிற்கு, சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, பெண் காவலர்களும் அரசு ஊழியர்களும் ஒருவித அச்சத்துடனே தங்களது நாட்களை நகர்த்த கூடிய நிலை இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it