அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னை யாரும் அடிக்க முடியாது; நியாபகம் வச்சுக்க; நான் திருப்பி அடிச்சா உங்களால தாங்க முடியாது என மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பேசிய வசனத்தை மேற்கோள் காட்டி அந்த காணொளியில் பேசியுள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், ஐயோ என்ன கொல பண்றாங்க கொல பண்றாங்க என கருணாநிதி அலறிய காணொளி தற்போது வைரலாகி வருகிறது.