எங்க ஆட்சி வந்த தரித்திரமோ? தண்ணீர் இல்லாதால் கண்ணீர் விட்ட தி.மு.க. கவுன்சிலர்!

எங்க ஆட்சி வந்த தரித்திரமோ? தண்ணீர் இல்லாதால் கண்ணீர் விட்ட தி.மு.க. கவுன்சிலர்!

Share it if you like it

திருச்செந்தூர் நகராட்சியில் நடக்கும் அவலம் குறித்து தி.மு.க.வை சேர்ந்த 3-வது வார்டு கவுன்சிலர் பேசிய ஆடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த ஆடியோவில் தி.மு.க. கவுன்சிலர் ரூபன் பேசியதாவது ;

’நான் திருச்செந்தூர் 3-வார்டு கவுன்சிலர் ரூபன் பேசுகிறேன். எனது வார்டில் குடிக்க தண்ணீர் இல்லை. இது கடவுளின் சோதனையா? அல்லது நாங்கள் வந்த தரித்திரமா என்று தெரியவில்லை. தண்ணீர் வரவில்லை என பொதுமக்கள் விமர்சனம் செய்ய துவங்கி விட்டனர். போற போக்கை பார்த்தார் என் மீது கல்லையெடுத்து வீச ஆரம்பித்து விடுவார்கள் போல இருக்கிறது. இந்த நிலை எங்கே போய் முடியுமோ என்று எனக்கு தெரியவில்லை.

மற்ற வார்டுகளில் கிணறு உண்டு. அப்பகுதி, மக்கள் அங்கு சென்று தண்ணீர் எடுத்துக் கொள்வார்கள் எனது வார்ட்டில் கடல் நீர் மட்டுமே உண்டு. இன்றோடு, பத்து நாட்கள் எனது வார்டில் தண்ணீர் வரவில்லை. இதனால், மக்கள் கடும் அவதியடைகின்றனர். புது நகராட்சி திருச்செந்தூர் என்று சொல்வதில் எந்த பெருமையையும் இல்லை. மக்களுக்கு, குடிநீர் தான் அவசியம். இனிமேல், ஏதாவது காரணம் கூறினால், பிஞ்ச செருப்பை கொண்டு நம்மை அடிக்க வருவார்கள். நம்மை எல்லாம் கொன்றே விடுவார்கள் என உருக்கமுடன் பேசியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it