கோவை மாவட்டம், கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, கடந்த அக்டோபர் மாதம் 23- ம் தேதி அன்று அதிகாலை கார் ஒன்று மிகுந்த சத்தத்துடன் சுக்கு நூறாக வெடித்து சிதறியது. இச்சம்பவத்தில், காரில் பயணம் செய்த ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் இன்று வரை பேசுப் பொருளாக இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க.வின் மூத்த தலைவரும் சுற்றுச்சூழல் பிரிவு செயலாளருமான கார்த்திகேய சிவசேனாதிபதி ஓன் இந்தியா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவின் நியூயார்க் இரட்டை கோபுரத்தை 14. 09. 2001 தீவிரவாதிகள் தகர்த்தனர். விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் செல்லவில்லை, அதுபோல தமிழக முதல்வரும் கோவை செல்லவில்லை என அவர் கூறியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.