வாய் கூசாமல் பொய் பேசிய அமைச்சர்!

வாய் கூசாமல் பொய் பேசிய அமைச்சர்!

Share it if you like it

தமிழக மக்கள் எங்கள் ஆட்சியின் மீது அதிருப்தி இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு பேசியிருக்கிறார். இதையடுத்து, வாய் கூசாமல் பொய் பேசும் இவர் ஒரு அமைச்சரா? என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பு ஏற்றுகொண்ட பின்பு சட்டம் ஒழுங்கு பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. கொலை, கொள்ளை, திருட்டு என தமிழகம் இருண்ட காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

இளைஞர்கள் கஞ்சாவிற்கு அடிமையாவதும், கல்லூரி மாணவிகள் மதுவிற்கு அடிமையாவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும், இதுதொடர்பான காணொளிகள் இன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. கழக கண்மணிகளின் அட்டூழியங்கள், அடாவடிகள் ஒருபுறம் இருந்து வருகிறது. தி.மு.க.வினர் மீது புகார் தெரிவிக்க காவல்நிலையம் சென்றால் அங்கு புகார்கள் ஏற்க மறுக்கப்படுகிறது. இப்படியாக, இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், ஹிந்துசமய அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் சேகர் பாபு. இவர், பத்திரிகையாளர்களை சந்தித்த போது, தி.மு.க.வின் மீது மக்களுக்கு அதிருப்தி இல்லை என வாய் கூசாமல் சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it