உளறி கொட்டிய அமைச்சர்:   மாட்டிக்கொண்ட தி.மு.க. எம்.எல்.ஏ.!

உளறி கொட்டிய அமைச்சர்: மாட்டிக்கொண்ட தி.மு.க. எம்.எல்.ஏ.!

Share it if you like it

திருச்சி சிவா எம்.பி.யின் வீட்டை தாக்கியது இவன்தான் என அமைச்சர் கே.என்.நேரு. பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் திருச்சி சிவா. இவரது, வீட்டை நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் அண்மையில் தாக்கினர். இதில், எம்.பி.யின் வீடு, கார் மற்றும் டூவீலர் அடித்து நொறுக்கப்படன. இச்சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தமிழகத்தில், எந்த அளவிற்கு சட்டம் ஒழுங்கு உள்ளது என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தன.

தி.மு.க. எம்.பி. வீட்டின் மீது நிகழ்ந்த தாக்குதல் மூலம் ஸ்டாலின் ஆட்சியின் லட்சணத்தை நம்மால் அறிந்துகொள்ள முடியும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இப்படிப்பட்ட சூழலில், அமைச்சர் கே.என். நேரு ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற அலங்கார தெருவிளக்குகள் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, அருகில் இருந்த ஸ்ரீரங்க எம்.எல்.ஏ.வை பார்த்து இவன்தான் சார் சிவாவின் வீட்டை தாக்கியவன். இவன், தப்பித்து கொண்டான் என பேசியிருக்கிறார்.

அமைச்சரின் இந்த உளறல் பேச்சு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it