8 பேர் உயிரிழப்பு: முதல்வருக்கு பா.ஜ.க. தலைவர் வலியுறுத்தல்!

8 பேர் உயிரிழப்பு: முதல்வருக்கு பா.ஜ.க. தலைவர் வலியுறுத்தல்!

Share it if you like it

பட்டாசு ஆலை விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் ;

காஞ்சிபுரம் குருவிமலை பகுதியில் உள்ள பட்டாசு ஆலை விபத்தில், 8 பேர் பலியான செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவர்கள் குடும்பத்தினருக்கு, பா.ஜ.க. சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு, தமிழக அரசு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும்.

இனியும் இது போன்ற வெடி விபத்துக்கள் நடக்காமல் தடுக்க, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும், அதற்கான பயிற்சியையும் பட்டாசு ஆலைகள் வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு அவற்றை உரிய முறையில் கண்காணித்து, தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்


Share it if you like it