கக்கா போறது… மூச்சா போறது… இதுபற்றிய கேள்வியை கேளுங்க: செந்தில் பாலாஜியை பற்றி கேட்க  வேண்டாம்… பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் ஆவேசம்!

கக்கா போறது… மூச்சா போறது… இதுபற்றிய கேள்வியை கேளுங்க: செந்தில் பாலாஜியை பற்றி கேட்க வேண்டாம்… பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் ஆவேசம்!

Share it if you like it

பத்திரிகையாளர்களிடம் தி.மு.க. மூத்த அமைச்சர் கே.என்.நேரு ஆவேசமாக பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

மின்சாரம்‌ மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்‌ துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவருக்கு, நெருக்கமானவர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம், தி.மு.க.வினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, செந்தில் பாலாஜி குறித்த கேள்வியினை பத்திரிகையாளர்கள் அமைச்சரிடம் முன்வைத்தனர். இதற்கு, அமைச்சர் அளித்த பதில் இதோ :

யூரின் போறது, வெளியே போறது, தண்ணீர் குடிக்கிறது, லைட் போடுவது போன்ற கேள்விகளை என்னிடம் கேளுங்கள் என அமைச்சர் காட்டமாக பத்திரிகையாளர்களிடம் கூறிவிட்டு கடந்து சென்று இருக்கிறார். அமைச்சருடன் வந்த கனிமொழியிடம் பத்திரிகையாளர்களிடம் கேள்வி எழுப்பிய போது அவரும் உரிய பதிலை அளிக்காமல் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.


Share it if you like it