தி.மு.க. எம்.பி.க்கு அண்ணாமலை பதிலடி!

தி.மு.க. எம்.பி.க்கு அண்ணாமலை பதிலடி!

Share it if you like it

அண்ணாமலை படிக்க காரணம் கலைஞர் கருணாநிதியின் பேனாதான் காரணம் என ஆ. ராசா தெரிவித்துள்ள கருத்திற்கு பா.ஜ.க. தலைவர் பதிலடி கொடுத்துள்ளார்.

தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஆ. ராசா. இவர், கலந்து கொண்ட பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போது இவ்வாறு கூறினார் : கலைஞர் போட்ட கையெழுத்தால்தான் அண்ணாமலை ஐ.பி.எஸ். ஆனார் என கூறியிருந்தார். இதற்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தி.மு.க. எம்.பி.க்கு தக்க பதிலடியை தனது ட்விட்டர் பக்கத்தில் கொடுத்துள்ளார்.

அண்ணாமலையின் ட்விட்டர் பதிவு இதோ :

என் பேனா, என் மை, என் பெற்றோர், நண்பர்கள் மற்றும் எனது ஆசிரியர்கள் அளித்த ஆதரவு. என்னைப்போல் பலர், அடுத்த கட்டத்திற்கு முன்னேறப் பல தியாகங்களைக் கடந்து, பல போராட்டங்களைச் சந்தித்து வந்துள்ளனர். வசதியாக ஒரு அறைக்குள் அமர்ந்து மற்றவர்களின் சாதனைக்கு உரிமை கொண்டாடுவது, ஸ்டிக்கர் ஒட்டுவது, இவை மட்டுமே திமுகவினரின் பங்களிப்பு என தெரிவித்துள்ளார்.


Share it if you like it