அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன? என்று மூத்த பத்திரிகையாளர் மணி பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகம் நன்கு அறிந்த மூத்த பத்திரிகையாளர் மணி. இவர், தி.மு.க.வின் தீவிர ஆதரவாளர் என்பது பலரின் கருத்து. அதனை மெய்ப்பிக்கும் வகையில், இவரது பேட்டிகள், காணொளிகள் இன்று வரை பா.ஜ.க.விற்கு எதிராகவே இருந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், தி.மு.க.வையும் அமைச்சசர் செந்தில் பாலாஜியையும் மிக கடுமையாக சாடியிருக்கிறார். இந்த காணொளிதான், தற்போது வைரலாகி வருகிறது.