கடலூர் மாவட்டம்: விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரை சேர்ந்த பாலமுருகன் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர், கடலூர் – விருத்தாசலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள உணவகத்திற்கு சென்று இருக்கிறார். அப்போது, மதுபோதையில் இருந்த முருகன் சாம்பார், ரசம், கார குழம்பினை ஒசியில் தருமாறு கடை ஊழியர்களிடம் கேட்டிருக்கிறார். அதற்கு, அவர்கள் தரமறுத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அவர் உருட்டை கட்டையுடன் வந்து பெரும் ரகளையில் ஈட்டுள்ளார். இதுகுறித்தான, செய்தியினை ஜெ நீயூஸ் வெளியிட்டுள்ளது.