செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு… பத்திரிகையாளர்களிடம் கதறிய சரவணன்!

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு… பத்திரிகையாளர்களிடம் கதறிய சரவணன்!

Share it if you like it

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருப்பது தி.மு.க. வட்டாரத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர், மீது அமலாக்கத்துறை அண்மையில் வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டபோது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அந்த வகையில், காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவரை எப்படியாவது ஜாமீனில் வெளியே கொண்டு வந்து விட வேண்டும் என தி.மு.க. அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தி.மு.க. மூத்த தலைவரும் வழக்கறிஞருமான சரவணன் நீதிமன்றத்தை அணுகினார். இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அமைச்சருக்கு ஜாமீன் வழங்க முடியாது என கூறியுள்ளார். இதையடுத்து, பத்திரிகையாளர்களை சந்தித்த சரவணன் அவர்களிடம் அலறி இருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it