நாடாளுமன்ற தேர்தலை சுட்டிக்காட்டிய பாதிரியார்:  தி.மு.க. எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க   முதல்வருக்கு கோரிக்கை!

நாடாளுமன்ற தேர்தலை சுட்டிக்காட்டிய பாதிரியார்: தி.மு.க. எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கோரிக்கை!

Share it if you like it

தி.மு.க. எம்.பி. மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிஷப் காட்ஃப்ரே நோபல் தமிழக முதல்வருக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

சி.எஸ்.ஐ. திருமண்டல கல்வி நிலவரக் கூட்டம் அண்மையில் நெல்லையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருநெல்வேலி திருமண்டல பேராயர் பர்ணபாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில், திருநெல்வேலி தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் உள்ளிட்ட திருமண்டல நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் காரசாரமான விவாதம் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. அப்போது, தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் எழுந்து, திருமண்டல நிர்வாகிகளை கண்டபடி திட்ட ஆரம்பித்தார்.

இதையடுத்து, ஆத்திரமடைந்த திருமண்டல நிர்வாகி ஒருவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று கேள்வி எழுப்ப, மயிரப் புடுங்கிட்டு இருந்தேன் என்று அநாகரீகமான வார்த்தைகளை பிரயோகித்தார் தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம். இது, திருமண்டல நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தி.மு.க. எம்.பி.யின் அநாகரிகமாக பேசிய காணொளியை இன்றும் சமூகவலைத்தளங்களில் காண முடியும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தி.மு.க. எம்.பி. ஞானதிரவியத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிரியார் பிஷப் காட்ஃப்ரே நோபல் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it