ஜெ.வை கொன்னது மோடிதான்: தி.மு.க. எம்.எல்.ஏ. திமிர் பேச்சு!

ஜெ.வை கொன்னது மோடிதான்: தி.மு.க. எம்.எல்.ஏ. திமிர் பேச்சு!

Share it if you like it

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கொன்றது பாரதப் பிரதமர் மோடிதான் என தி.மு.க. எம்.எல்.ஏ. பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் தமிழக முதல்வராக இருந்தவர் செல்வி ஜெயலலிதா. இவர், உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி கடந்த 2016 – ஆம் ஆண்டு டிச., 5 – ஆம் உயிரிழந்தார். உண்மை இவ்வாறு இருக்க, ஜெயலலலிதாவின் மரணம் குறித்து தி.மு.க. எம்.எல்.ஏ. சர்ச்சை கருத்தை கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்த பெரியசாமிபுரத்தில், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், விளாத்திகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ. மார்கண்டேயன் கலந்து கொண்டார். அப்போது, அவர் கூறியதாவது ; ஜெயலலிதாவை கொன்றது மோடிதான் என பேசியிருக்கிறார். உண்மைக்கு புறம்பாகவும், நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள தலைவர் மீது தி.மு.க. எம்.எல்.ஏ. வீண் பழியை சுமத்தி இருப்பதற்கு பலர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it