நிருபர் கேட்ட ஒரே கேள்வி: அலறி அடித்துக் கொண்டு  ஓடிய கனிமொழி!

நிருபர் கேட்ட ஒரே கேள்வி: அலறி அடித்துக் கொண்டு ஓடிய கனிமொழி!

Share it if you like it

வின் டிவியின் டெல்லி நிருபர் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், தி.மு.க எம்.பி கனிமொழி அலறி அடித்து கொண்டு ஒடிய காணொளி தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி எம்பி கனிமொழி, பொள்ளாச்சி எம்பி சண்மூக சுந்தரம், சேலம் எம்பி பார்த்திபன் மற்றும் கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி உள்ளிட்டவர்கள் நேற்றைய தினம் டெல்லியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயலை நேரில் சந்தித்தனர். அப்பொழுது, பருத்தி நூல் விலை உயர்வால் நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கு, உரிய தீர்வினை ஏற்படுத்தி தர வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினர்.

Image

இதையடுத்து, பத்திரிக்கையாளர்களை தமிழக எம்.பிக்கள் குழு சந்தித்தன. அப்பொழுது, வின் டிவியை சேர்ந்த டெல்லி நிருபர் தி.மு.க எம்பி கனிமொழியிடம் இவ்வாறு கேள்வி எழுப்பினார்;

கடந்த அ.தி.முக ஆட்சியில் பெண் விதவைகள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாக இருப்பதாக சொன்னீர்களே இப்பொழுது, குறைந்து விட்டார்களா என கேள்வி எழுப்பினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத கனிமொழி, மழுப்பலான பதிலை அளித்து விட்டு அங்கிருந்து ஓட்டம் எடுத்தார். அருகில் இருந்த காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியிடம் உங்களிடம், ஒரு கேள்வி இருக்கு மேடம் என்று நிருபர் கேட்க இதற்கு மேல் இங்கிருந்தால் நமக்கும் பெரும் ஆபத்து என்று அவரும் ஓட்டம் எடுத்த காணொளி தான் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it