திமுக அரசு ஒரு விளம்பர அரசாக செயல்படுகிறது – எடப்பாடி பழனிசாமி

திமுக அரசு ஒரு விளம்பர அரசாக செயல்படுகிறது – எடப்பாடி பழனிசாமி

Share it if you like it

“சென்னையில் தனியார் நிறுவனமானது கார் பந்தயம் நடத்துவதை பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் தனியார் நிறுவனம் சார்பில் டிசம்பர் 9,10 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது. இதற்காக சென்னையின் முக்கிய பகுதிகளில் சாலை பணிகள் நடைபெறுகிறது. மக்கள் அதிகளவில் சென்று வரும் சாலையில் இதுபோன்ற கார் பந்தயம் நடத்தக் கூடாது என்று அதிமுக சார்பில் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மேலும் திமுக அரசு ஒரு விளம்பர அரசாக செயல்படுகிறது. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு தனியார் நிறுவனம் மூலம் கார் பந்தயம் நடத்தப்படுகிறது. கார் பந்தயம் நடத்தப்படும் இடம் சென்னையின் முக்கியமான இடமாகும். அந்த இடத்தில் தான் அரசு பன்னோக்கு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, சென்ட்ரல் ரயில் நிலையம், தலைமைச் செயலகம், ராணுவ உயர் அதிகாரிகள் குடியிருப்பு ஆகியவை வருகின்றன.

மருத்துவமனைக்கும் ரயில் நிலையத்துக்கும் செல்லும் மக்களுக்கு இடையூறாக இந்த கார் பந்தயம் நடத்தப்படுகிறது. கார் பந்தயம் நடத்துவதற்காகவே இருங்காட்டுகோட்டையில் மைதானம் இருக்கிறது. ஆனால் அதை தவிர்த்துவிட்டு மக்களுக்கு இடையூறாக இந்த பந்தயம் நடக்கிறது. இதனால் ஏழை மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை” என்று கூறினார்.


Share it if you like it